ஊராட்சி பெண் தலைவரையும் அவரது கணவரையும் கண்டித்து சாலை மறியல்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த, வெங்கடசமுத்திரம் ஊராட்சயில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந் நிலையில், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள காயத்ரி நவீன்குமார் என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்காக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்கமால், தனது கணவருடன் சேர்ந்து தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
மேலும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும், பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பும் போதெல்லாம், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி நவீன்குமார், முறையான பதிலளிக்காமல், ஒருமையில் பேசி, வார்டு உறுப்பினர்களை கூட்டத்தை விட்டு வெளியேறும் படிமடாவடியாகஎடுத்தறிந்து பேசுகிறாராம்.
அதுமட்டுமின்றி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்களை மிரட்டுவதாக கூறி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவரை கண்டித்து, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வாணியம்பாடி - உதயேந்திரம் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வார்டு உறுப்பினர்களின் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனா. இதனால் வாணியம்பாடி - உதயேந்திரம் சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.