ஒ.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரானார்!

வி.டி.வித்யாசாகர்,
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒ.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா, அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகி தொடர்ந்து, ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
ஆனால் அந்த கட்சியால் போனி தட்டவில்லை.
ஆகவே அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்ததுடன், தனது புதிய கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார். லவர் காங்கிரஸில் சேர்ந்த கையோடு, கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதற்கான கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.
அந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டிருக்கும் சூழலில் இன்று ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒ.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் முதல்வர் மகள் எதிர்கட்சியில் ஐக்கியம் என் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.