வண்ணாரப்பேட்டையில் வரிசை கட்டும் கொலை சம்பவம்!

வண்ணாரப்பேட்டையில் வரிசை கட்டும் கொலை சம்பவம்!

 ஜி.சாந்தகுமார்,

 சென்னை வண்ணாரப்பேட்டை போலிஸ் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 3 கொலைகள் நடந்திருக்கிறது.

  தற்போது சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் தர்மா என்பவரை கொலை கும்பல் தீர்த்து கட்டியிருக்கிறது. கட்டிட வேலை செய்து வந்த இவர்,  தனது நண்பர்களான கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரெயில்வே கேட் அருகே சரக்கடித்துக் கொண்டிருந்தனர்.

  இந்நிலையில் அங்கு  மோட்டார் சைக்கிள்களில் வரும் சத்தம் கேட்டிருக்கிறது. உஷாரான தர்மாவும் அவரது நண்பர்களும் அங்கிருந்து புறப்பட முயன்றனர். ஆனால் அங்கு வந்த மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தர்மாவை சரமாரியாக வெட்டினர். அதில் ஸ்பாட்டிலேயே தர்மா பரிதாபமாக இறந்தார்.

 தர்மாவுடன் இருந்த அவரது நண்பர்களான கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோர் கொலை கும்பலை தடுக்க முயன்றனர்.

அப்போது அவர்களையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் இருவரும் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 உடனே ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான தர்மா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் பற்றி தெரியவந்திருக்கிறது.

   கொலையான தர்மாவின் அண்ணன் சூர்யா அப்பகுதியில் அடிதடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் சூர்யாவை தீர்த்துக்கட்ட வந்தனர். ஆனால் ஆள் மாறி அண்ணன் சூர்யாவுக்கு பதில் அவரது தம்பியான தர்மாவை வெட்டிக்கொன்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தொந்தது.

 இந்நிலையில், தப்பி ஓடிய கொலை வெறி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.