ரயில் நிலைய காத்திருப்பு அறையில் பெண்ணிடம் சில்மிஷம்!

 ரயில் நிலைய காத்திருப்பு அறையில் பெண்ணிடம் சில்மிஷம்!

கு.அசோக்,

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் பெண்ணை தவறான முறையில் சீண்டிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் இணைந்து கடந்த வாரம் அம்மா வீட்டுக்காக அரக்கோணத்திற்கு வந்தார்.

  இரவு நேரத்தில், இருவரும் அரக்கோணம் ரெயில்வே நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் ஆவடி செல்லும் ரயிலுக்காக காத்திருந்த போது, இளம் பெண்ணின் கணவர் கழிவறைக்குச் சென்றார்.

  அந்த நேரத்தில், இளம் பெண்ணின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு வாலிபர், இளம் பெண்ணிடம் தவறான முறையில் அணுகியதாக கூறப்படுகிறது.

  அதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், உடனடியாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அக்கையா நாயுடு தெருவைச் சேர்ந்த விஜயராஜ் எனப்படும் விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.

   இச்சம்பவம், இரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும், காத்திருப்பு அறைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.