சீனியர் அமைச்சரின் தம்பி கொலை வழக்கில் முன்னாள் பாமகவினரிடம் விசாரணை!

சீனியர் அமைச்சரின் தம்பி கொலை வழக்கில் முன்னாள் பாமகவினரிடம் விசாரணை!

 த.நெல்சன்,

  சீனியர்  அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு 11 ஆண்டுகளாக திக்கி திணறிக்கொண்டிருக்கிறது. கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது. அப்படியிருக்க பாமக வின் முன்னாள் பிரமுகர்கள் இருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம்.கடந்த 2012-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற நிலையில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டா£.பின்னர் ராமஜெயத்தின் உடல் கொடூரமாக தாக்கப்பட்டு முள்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கல்லணை சாலையில் காவிரி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்டது.  

  இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இருந்த போதும் ராமஜெயம் கொலை வழக்கின் குற்றவாளிகள் பிடிபடவில்லை.

 அப்படியிருக்க பாமக வின் முன்னாள் பிரமுகர்கள் எனக் சொல்லப்படும் பிரபு, உமாநாத் இருவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட்டனர். ராமஜெயத்தை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட காரை இந்த பாமக பிரமுகர்களாக கூறப்படும் பிரபு, உமாநாத் ஆகியோரும் பயன்படுத்தியதாகவும் அதனாலேயே சந்தேக வளையத்துக்குள் கொண்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

   தட்டு தடுமாறி வரும் இந்த வழக்கில் இப்படி அடிக்கடி சில திருப்பங்கள் வந்து போவதுண்டு. ஆனால் இந்த திருப்பம்!?