ஊழல் தடுப்புக்கு ஊர்வலம்!யார் நடத்தியது தெரியுமா?

ஊழல் தடுப்புக்கு ஊர்வலம்!யார் நடத்தியது தெரியுமா?

கு.அசோக்,

ஊழல் தடுப்பு குறித்து பவர் கிரிட் நிறுவனம்  சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் திருவலம் பகுதியில் நடைபெற்றது

 வேலூர்மாவட்டம், பொன்னை கூட்டு சாலை சந்திப்பிலிருந்து பவர் கிரிட் என்கிற நிறுவனம் சார்பில் கோட்ட மேலாளர் வெங்கடேஸ்வரராவ் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது நடந்தது.

 இதில் பவர் கிரிட் நிறுவனத்தின் ஊழியர்களும், பணியாளர்களும் பங்கேற்று யாரும் ஊழலுக்கு துணை போக கூடாது ஊழல் லஞ்சத்தை ஒழித்து நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வல்லரசாக மாற்ற வேண்டுமென கோரினர்.

 மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலமானது திருவலம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.