என்னையா கொளுத்தரே? கட்டிப்பிடித்த பெண்!

கு.அசோக்,
காவேரிப்பாக்கம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சித்ரா, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், ஆர்.கே. பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் கடந்த 10-வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 10, மற்றும் 8-வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் குழந்தைகள் இருவரும் அம்மா உடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்ரா நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரம் செய்து கொடுத்து இருந்துள்ளார். அப்போது முகமுடி அணிந்தபடி வந்த ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து சித்ரா மீது ஊற்றி உள்ளார்.
அப்போது அடுப்பு பகுதியில் சித்ரா இருந்ததால் தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது உள்ளது.
இதில் அவேசம் அடைந்த சித்ரா தன் மீது பெட்ரோல் ஊற்றிய நபரையும் இருக்கி அனைத்து கொண்டு கூச்சலிட்டு உள்ளார்.
இதில் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து தீயை அனைத்துள்ளனர்.
பின்னர் முடி அணிந்து வந்த நபர் சித்ராவின் கணவர் என தெரிய வந்தது. இதனையடுத்து பொது மக்கள் இருவரையும் மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.