பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்! திமுக வைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு!

பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்! திமுக வைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு!

G.Snatha kumar,

 சென்னையில் புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும்¢ மகேஸ்வரியை இரண்டு வாலிபர்கள் மானபங்கம் படுத்தும் வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில்  பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுகவைச் சேர்ந்த இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  அதுபற்றி மகேஸ்வரி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் இளைய முதலி தெருவில் நேற்று முன்தினம் இரவு சாலையில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை, தடுத்து நிறுத்தினேன், அப்போது இரண்டு பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, மானபங்கம் படுத்தும் வகையில் பேசினர் என்று தெரிவித்திருந்தார்.

  அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் மகேஸ்வரியிடம் தகராறு செய்தது திமுகவை சேர்ந்த ரமேஷ், அருண் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.