திமுக தலைவர்களை எம்.பி.களாக டெல்லிக்கு வரவிடக்கூடாது! ஜெ.பி.நட்டா ஆவேச பேச்சு!

திமுக தலைவர்களை எம்.பி.களாக டெல்லிக்கு வரவிடக்கூடாது! ஜெ.பி.நட்டா ஆவேச பேச்சு!

  ஜி.சாந்தகுமார்,

   திமுக வினரை எம்பிகளாக டெல்லிக்கு வரவிடக்கூடாது"நான் சென்னைக்கு வந்ததும் தெரு விளக்குகளை என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறினார். மேலும், திமுகவின் ஆட்சியானது முந்தைய இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை நினைவுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வந்தார். அவரை பார்ப்பதற்காக கூடிய பாஜகவினரை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் துறைமுகத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசியதாவது:

 இந்தியாவிலேயே நான் பார்த்ததில் மிக மிக மோசமான ஆட்சி திமுகவின் ஆட்சி தான். திமுக தலைமைக்கு தலையில் ஒன்றுமே இல்லை. ஜனநாயகத்தின் மீது ஒரு துளியும் மதிப்பு இல்லாத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. நான் சென்னைக்கு வந்ததும் சில விஷயங்கள் உடனுக்குடன் நடந்தன. என்ன தெரியுமா? நான் போகும் இடங்களில் உள்ள மார்க்கெட்டுகளும், கடைகளும் அவசர அவசரமாக மூடப்பட்டன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. பெரும் போலீஸ் படையே குவிக்கப்பட்டது.

  இதை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது, இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலக்கட்டம் தான். ஆனால் திமுகவுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் அவர்களே, உங்களை மக்கள் வெளியே தூக்கியெறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  நான் இங்கு பார்த்த காட்சிகள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன. கடைக்காரர்களை போலீஸார் கட்டாயப்படுத்தி கடையை அடைக்க வைக்கின்றனர். இதுதான் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயகமா? இதுதான் திமுகவின் பாரம்பரியமா? இதுபோன்ற திமுக தலைவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக (எம்.பி.க்களாக) டெல்லிக்கு வர விடலாமா? விடவே கூடாது.

  நான் வரும் போது தெரு விளக்குகளை தான் திமுக ஆஃப் செய்தது. ஆனால் மக்களோ திமுகவையே விரைவில் ஆஃப் செய்யப் போகிறார்கள் என்று ஜே.பி. நட்டா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.