கணினி மூலம் குலுக்கல் செய்யப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையானதுணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இரண்டு வாக்குபதிவு ) இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 1303 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள 1561 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1561 கட்டுப்பாட்டு கருவிகள், 1692 விவிபாட் இயந்திரங்களை ஏற்கனவே கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அந்தெந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியலின் படி 31 வேட்பாளர்கள் உள்ளதால் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைக்கப்படவேண்டியுள்ளது.
எனவே தற்பொழுது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள 1561 துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முருகன், செல்வி சுபலட்சுமி, சுமதி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.