நாயை குளிக்கவைத்த போது குட்டையில் மூழ்கி குழந்தைகள் பலி!

நாயை குளிக்கவைத்த போது குட்டையில் மூழ்கி குழந்தைகள் பலி!

 ஜி.கே.சேகரன்,

 வளர்ப்பு நாயை குளிப்பாட்ட சென்ற போது ஏரியில் மூழ்கி (அக்கா தம்பி) இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை புளியந்தோப்பு வட்டம் பகுதியில் எறா குட்டை உள்ளது. அதில், நாயை குளிப்பாட்ட  சென்ற அதே பகுதியை சேர்ந்த முருகன் மாலதி தம்பதியினரின் குழந்தைகள் ஜோதிகா (8) மற்றும் அவரது தம்பி ஜோதிஷ் (7) ஆகிய இருவரும் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

 இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா.¢ மேலும் இரண்டு குழந்தைகள் உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.