ஜார்கண்ட் முதல்வர் கைது! சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்!

ஜார்கண்ட் முதல்வர் கைது! சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்!

ம.பா.கெஜராஜ்,

 ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று பலமணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.  பின்னர் நேற்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

   முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அப்படியிருக்க ஜார்கண்ட்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

   81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.

தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

  சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

  பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.