இனிப்பக உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்:- கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை சதி தீட்டிய மனைவி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தீபாவளி அன்று நடைபெற்ற இனிப்பக உரிமையாளர் கொலையில் இறந்தவரின் மனைவியே தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இராஜபாளையத்தில் கடந்த 12-ஆம் தேதி தீபாவளி அன்று இனிப்பாக உரிமையாளா சிவகுமார்¢ தனது குடும்பத்துடன் வரும்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலை சம்பந்தமாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையின் தொடர் விசாரணையில் திதிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகுமாரின் மனைவி காளீஸ்வரி தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலையை நிறைவேற்றி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிப்பக உரிமையாளர் சிவக்குமார் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். மேலும் விஜயகுரு டிரஸ்ட் என்று ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் அதனைத் தொடர்ந்து தனது கடையில் பணியாற்றி வந்த காளீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஐந்து வயதில் மகன் ஒருவர் உண்டு.
இந்நிலையில் இராஜபாளையத்தில் உள்ள தனது ஸ்வீட் கடையை தற்காலிகமாக மூடிவிட்டு சென்னையில் தனது குடும்பத்துடன் சிவக்குமார் வசித்து வந்துள்ளார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு திரும்பிய சிவகுமார் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக தெற்கு வெங்காநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சொந்தமான இடத்தில் நால்வர் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும் அவர்களை தனது இடத்தை விட்டு போகச் சொல்லி சிவக்குமார் சத்தம் போட்டதாகவும் மீண்டும் அவ்வழியாக வந்த சிவக்குமாரை வழிமறித்து வாகனத்தை தள்ளிவிட்டு நால்வரும் தனது கணவரை வெட்டியதாக காளீஸ்வரி தனது வாக்குமூலத்தில் 12 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
காளீஸ்வரியின் வாக்குமூலத்தை கொண்டு தொடர் விசாரணையில் ஈடுபட்ட இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை வளையத்திற்குள் காளீஸ்வாயை¤ கொண்டு வந்தனர். அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற கின்னஸ் சாதனை படைத்த யோகாசன பயிற்சியாளருக்கும் காளீஸ்வரிக்கும் திருமணத்தை கடந்த கள்ள உறவு இருப்பது தெரிய வந்தது. காளீஸ்வரி தான் தனது கள்ளக்காதலனுக்கு தகவல் தெரிவித்து அவரது நண்பருடன் இணைந்து சிவக்குமாரை வெட்டி படுகொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் சிவகுமார் படுகொலைக்கு கள்ள உறவு தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி காளீஸ்வரி, யோகா பயிற்சியாளர் ஐயப்பன், இவரது நண்பர்கள் விக்னேஸ்வரன், மருதுபாண்டி ஆகிய நால்வர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியே திட்டமிட்டு கணவரை கொலை செய்த சம்பவம் இராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.