284.32 கோடி ரூபாய்:- 2828 குடியிருப்புகள்! முதல்வர் முகஸ்டாலின் திறந்து வைத்தார்!

284.32 கோடி ரூபாய்:- 2828 குடியிருப்புகள்! முதல்வர் முகஸ்டாலின் திறந்து வைத்தார்!

  ஜி.சாந்தகுமார்,

  284.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2828 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 284.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2828 குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

   இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.