பணம் மோசடி செய்த நபரை கொன்று புதைத்த ஆசிரியர்!

நவீன்,
ஊத்தங்கரை அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபரை ஆசிரியர் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் அதே பகுதியில் உள்ள சுண்ணாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்கத்தில் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
கணேசனின் உறவினரான சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் தமக்கு மேலிடத்தில் செல்வாக்கு உள்ளது, யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் அவர்களை அழைத்து வாருங்கள் என்று ஆசை வார்த்தை சொல்லியிருக்கிறார்.
அதனை நம்பிய ஆசிரியர் கணேசன், தம்க்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக வெங்கடேசனிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். வெங்கடேசன். கணேசனிடம் பணம் பெற்று பல வருடங்கள் ஆகியும் யாருக்கும் வேலை வாங்கித் தராததால்மிழுத்தடித்துள்ளார். இதனால் ஆசிரியரெ கணேசனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.
ஆகவே கணேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, வெங்கடேசனிடம் எப்படியாவது பணத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டனர். அப்போது வெங்கடேசன் சேலம் அருகே உள்ள தனது நிலத்தை விற்பனை செய்ய வந்துள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஆசிரியர் கணேசன் தனது கூட்டாளிகளுடன் சேலம் சென்றுள்ளார்.
அங்கு வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோருடன் பணம் கேட்டு வாக்குவாதம் செய்து செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி உள்ள நிலையில் அவர்கள் இருவரையும் தன்னுடைய காரில் கடத்தி திப்பம்பட்டி அருகில் உள்ள கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மம்பட்டியில் உள்ள தன்னுடைய அண்ணனுக்கு சொந்தமான செல்வி ப்ளூ மெட்டல் ஜல்லி கிரஷருக்கு அழைத்து வந்து அங்குள்ள இரண்டு ரூம்களில் தனித்தனியாக வெங்கடேசன் மற்றும் லட்சுமியை அடைத்து வைத்துள்ளனர்.
அங்கு வெங்கடேசனை அடித்து துன்புறுத்தி உள்ளனர். அப்போது பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் வெங்கடேசன் இறந்துள்ளார். வெங்கடேசன் இறந்ததை அறிந்த கணேசன் மற்றும் கூட்டாளியினர் நித்தியானந்தம், விக்னேஷ் ஆகியோர் அந்த கிரசருக்கு உள்ளேயே ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்து விட்டனர்.
அதன் பிறகு மனைவி லட்சுமி தன்னுடைய கணவர் வெங்கடேசன் எங்கே என்று கணேசனிடம் விசாரிக்கும் போது உனது கணவரை உயிருடன் வேண்டுமென்றால் எங்களுக்கு பணம் அல்லது உங்களிடம் உள்ள சொத்தை எங்களுக்கு கிரயம் செய்து கொடுங்கள் அப்போதுதான் உன் கணவரை விடுவோம் என்று கூறி லட்சுமியை சேலம் அனுப்பி விட்டனர்.
சேலம் சென்ற லட்சுமி தனது மகனிடம் கூறி சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்றும் திப்பம்பட்டியை சேர்ந்த கணேசன் தனது கணவரை கடத்தி வைத்து உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கணேசன் மற்றும் அவரது கூட்டாளிகளை சேலம் பள்ளப்பட்டி போலீசார் லட்சுமி மூலம் நிலத்தை கிரயம் செய்து தருகிறோம் எங்களது கணவரை கூட்டி வாருங்கள் என்று சொல்ல வைத்து சேலம் வர வைக்கின்றனர்.
அந்த தகவலை குன்றத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்த வெங்கடேசனின் மகன் சந்தோஷ் நேற்று முன்தினம் சேலத்தில் வைத்து கணேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர்.
கணேசன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த பின்பு அவர்களை நன்கு கவனித்ததில், வெங்கடேசனை ஜல்லி கிரசரில் வைத்து அடித்து கொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாகலாசிரியர் கணேசன் டீம் ஒப்புக்கொண்டது.
ஆகவே, குன்றத்தூர் போலீசார் மூவரையும் அழைத்துக் கொண்டு ஊத்தங்கரை வந்தனர். நேற்று குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் ஊத்தங்கரை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோரிடம் தகவல் தெரிவித்ததுடன், அவர்கள் உதவியுடன் வெங்கடேனின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் அரசு மருத்துவர் பிரவீணா கோமதி தலைமையில் டாக்டர் சதீஷ்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை நடத்தினார்கள்.
உடன் தாசில்தார் திருமால் வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் இருந்தனர்.
அரசு வேலை வாங்கிக்கொடுப்பதாக பண மோசடி செய்த நபரை ஆசிரியர் தமது சகாக்களுடன் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.