கலால் பிரிவு ஏட்டு மரணம்! விபத்து ஏற்படுத்தியவர் தப்பி ஓட்டம்!!

கலால் பிரிவு ஏட்டு மரணம்! விபத்து ஏற்படுத்தியவர் தப்பி ஓட்டம்!!

ஜி.கே.சேகரன்,
ஆத்தூர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு முதல் நிலை காவலர் டாட்டா ஏசி வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில்  உயிரிழப்பு.

 திருப்பத்தூர்மாவட்டம்,வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவில்,சேலம் மாவட்டம் தாரமங்கலம் கிராமத்தைச் சார்ந்த வீரன் மகன் ஆறுமுகம்   (40) முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் ஏலரைபட்டி கிராமத்திலிருந்து இருந்து பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனமான ஹோண்டா சைனில் தேசிய நெடுஞ்சாலை ஆத்தூர்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காட்பாடியில் இருந்து டிவிஎஸ் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு டாடா ஏசி வாகனம் ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஆறுமுகம் வந்த இருசக்கர வாகனத்தின் மீது டாட்டா ஏஸ் வாகன மோதியதில் தூக்கி எறியப்பட்டு ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்த டாட்டா ஏஸ்  வாகன ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

 இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதல் நிலைக் காவலர் ஆறுமுகத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டாட்டா ஏசி வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

பணி முடித்துவிட்டு வரும் வழியில் முதல் நிலை காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.