தென்காசியில் சசிகலா தொடங்கும் அரசியல் டூர்!

தென்காசியில் சசிகலா தொடங்கும் அரசியல் டூர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

வி.கே.சசிகலா தென்காசியில் அரசியல் சுற்றுப்பயணம் செய்யவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி எஸ்.பி.யிடம் மனு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

  2026- சட்டபேரவை தேர்தலில் ஒன்றுபட்ட  அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், கட்சியை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரவும்,தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை, பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா அறிவித்திருந்தார்.

 அப்படியிருக்க சசிகலா தனது சுற்றுப்பயணத்தை வரும் 16-ம்தேதி தென்காசியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்டபொறுப்பாளர் பூசத்துரை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

  காவல்துறை அனுமதி கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இம்மாவட்டத்தில் அவர் 21-ம்தேதி வரை சட்டப்பேரவை தொகுதிவாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.

இந்த பயணம் சின்னம்மாவுக்கு பலனை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.