எங்களை காப்பாத்துங்கம்மா...மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறிய பெண்மணி!
கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சிப்காட் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டு இருந்த பேருந்தும் சென்னை நோக்கி காய்கறிகளை ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
விபத்தில் லாரியில் பயணித்த ஓட்டுனர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர். பேருந்தில் பயணத்தை 35 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்பொது திடீரென ஒரு பெண்மணி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுதார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் இவரது மனைவி லேகா (42) என்பதும் இவர்களுக்கு பொற்கொடி, ஹமநாத் என 2 பிள்ளைகள் உள்ளனர் என தெரிய வந்தது.
இந்த நிலையில், ரமேஷூடன் பிறந்த அண்ணன் இருவர் உட்பட அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
அப்பொது அண்ணன்கள் இருவருக்கு மட்டுமே பட்டா வந்த்தாதால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அண்ணன்களிடம் சண்டையிட்டுள்ளார். இதில் விரக்தி அடைந்த ரமேஷ் விஷம் குடித்ததாக தெரிகிறது. இதனால் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்த்த இந்த பெண்மணி எங்களை காப்பாத்துங்க என காலில் விழுந்து கைகளை பிடித்து கதறி அழுதார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.