எம்ஜிஆர் இல்லை என்றால் நீ ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பாய்! ஆ.ராசாவை சாடிய செல்லூர் ராஜு!

எம்ஜிஆர் இல்லை என்றால் நீ ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பாய்! ஆ.ராசாவை சாடிய செல்லூர் ராஜு!

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 எம்ஜிஆர் இல்லை என்றால் நீயெல்லாம் ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

 திமுக வின் பேச்சாலரும், நீலகிரி எம்பி யுமான ஆ. ராசா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், கருணாநிதி வேண்டுமானால் எம் .ஜி. ஆரை நண்பர் என்று சொல்லிக்கொள்ளட்டும். ஆன் "நான் எல்லாம் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்லை" என்றவர்  எம்ஜிஆரை அவமரியாதையாக  பேசினார்.  அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆ. ராசாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

 இந்நிலையில், மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது,

2 ஜி புகழ் ஆண்டிமுத்து ராசாவே, எம்ஜிஆரை பத்தி நீ தப்பா பேசுறியா? எம்ஜிஆரும், அம்மாவும் இல்லைனா நீ கோமணம் கட்டிட்டு திரிஞ்சிருக்கணும். ஆடு மேய்ச்சிட்டு இருந்திருப்ப. நீ சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறியா? ஊழல் பண்ணிட்டு திகார் ஜெயிலிலில் இருந்தவன் நீ. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் இல்லையா?

   நீ யாரை பார்த்து பேசி இருக்கிறாய்? மனித தெய்வம் புரட்சித் தலைவரை பார்த்து பேசி இருக்கிறாய். இறந்தும் இறைவனாய் இருப்பவர் எங்கள் புரட்சித் தலைவர். இந்த நாட்டு மக்களுக்கு தனது சொத்தையும், பணத்தையும் தானமாக வழங்கியவர் எம்ஜிஆர். அவரை பத்தி நீ எல்லாம் பேசலாமா? உனக்கு தகுதி இருக்கா அவரை பத்தி பேச? திமுகவின் ஏவல் .... ஆக இருக்கிறாயே. உன் தலைவன் குடும்பத்தையே காப்பாற்றியவர் என் தலைவன் எம்ஜிஆர் தான். அது தெரியுமா உனக்கு?

 இதை  உன் தலைவன் கருணாநிதியே  சொல்லி இருக்கிறார். 1971-இல் 'எங்கள் தங்கம்' படத்தின் வெற்றி விழாவில் கருணாநிதி சொல்கிறார். நான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததற்கு காரணமே எம்ஜிஆர் என்று. இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் எம்ஜிஆரை பல மேடைகளில் பெரியப்பா பெரியப்பா என்று சொல்கிறாரே. நீங்கள் (ஸ்டாலின்) உண்மையில் அப்படி நினைத்திருந்தால் ஆ. ராசாவை கண்டித்திருக்க வேண்டாமா? இவ்வாறு செல்லூர் ராஜு காட்டமாக பேசினார்.