தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவை செய்ய வந்தவர்கள் என்று நான் பேசவில்லை! அந்தர் பல்டி அடித்த முன்னாள் நடிகை கஸ்தூரி!

தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவை செய்ய வந்தவர்கள் என்று நான் பேசவில்லை! அந்தர் பல்டி அடித்த முன்னாள் நடிகை கஸ்தூரி!

ம.பா.கெஜராஜ்,

  பிரமாணர்கள் கலந்து கொண்ட ஒரு ஆர்பாட்டத்தில் பேடிய முன்னாள் நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவை செய்ய வந்தவர்கள் என்று பேசினார்.  மேலும் பறையர் என்கிற வார்த்தையையும் பயன்படுத்தினார். அதற்கு கண்டணங்களும் புகார்களும் எழுந்த நிலையில் நான் அப்படி பேசவேயில்லை என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

  பிராமணர்களின் பாதுகாப்பு குறித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

 அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள்.

 அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

 தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. பல்வேறு புகார்கள் அவர் மீது  அளிக்கப்பட்டிருக்கிறது.  

  இந்த சூழலில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய பங்களாவில்  செய்தியாளர்களை சந்திப்பதாக கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை.

  தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர். நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

 அப்போது கஸ்தூரியிடம் குறுக்கிட்டு பேசிய பத்திரிகையாளர் ஒருவர், "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்தெலுங்கர்கள்" என்று நீங்கள் பேசியதாக கூறினார்.

 அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அப்படி எதுவும் தான் சொல்லவில்லை என்று மறுத்து பேசினார்.  முன்தினம் தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு இன்று கஸ்தூரி அப்படி எதுவும் தான் பேசவில்லை என்று மாற்றி பதிலளித்தார்.

 இருந்தாலும் கூட கஸ்தூரி  தெலுங்கர்களை இழிவாக பேசியதும்,  அப்படி பேசவே இல்லை என்று பல்டி அடித்த சம்பவமும் மக்கள் மத்தியில் உலா வருகிறது.

அவர் நேற்று முன்தினம் நடந்த ஆர்பாட்டத்தில் விசிக திருமாளவனை மையப்படுத்தி பறையர் என்கிற வார்த்தையை பயன்படுத்தினார்.

  இவையெல்லாம் தற்போது வழக்காக மாறவிருக்கிறது.