கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் சூதாட்டம் ஜரூர்!

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் சூதாட்டம் ஜரூர்!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் சூதாட்டம் ஜரூராக நடந்து வருகிறது. குறிப்பாக வேலூர் டோல்கேட் பனந்தோப்பு பகுதி, கொணவட்டம், காட்பாடி மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.

  குடியாத்தம் மற்றும் வேலூர் டோல் கேட் பகுதிகளில் ஆரம்ப பந்தயமே லட்சங்களில் தான் துவங்குகிறது. இந்த மாதிரி தொழில் செய்பவர்கள் அவ்வப்பொழுது மாவட்ட காவல் அதிகாரிகளிடம் சென்று நான் திருந்திவிட்டேன் என்று பொய்யாக எழுதி கொடுத்துவிட்டு வந்து சூதாட்ட பிசினஸை தொடர்கிறார்கள்.

  இது போன்ற பகுதிகளில் தான் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக கூறப்படுகிறது.

  இதே போல் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுகிறார்கள்.

  ஆனால் அவர்களை போலீசார் பிடித்து லாடம் கட்டியிருக்கிறார்கள்.

   மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கந்திகுப்பம் அருகே உள்ள உரக்கம், மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (34), நாகன பள்ளியை சேர்ந்த சகாதேவன் (44), பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சபரி (26), விக்கி (26,) ஓசூர் அருகே உள்ள பந்தலபள்ளியை சேர்ந்த வினோத் குமார் (41), குந்தாரப்பள்ளியை சேர்ந்த இமை (30)வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரிஜித்ரன் (21), சூளகிரி அருகே உள்ள பேடாரப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் (27), நகர பள்ளியை சேர்ந்த குலசேகரன் (28), ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விக்னேஷ் (27), கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.