பிச்சை கேட்கவில்லை:- வெள்ள நிவாரணம் தான் கேட்டோம்! அமைச்சர் கோபப் பேச்சு! ஸ்ரீராம் அடுக்கு மாடியினர் உதவி!

உ.சசிகுமார், பா.சுரேஷ்,
பிச்சை கேட்கவில்லை, வெள்ள நிவாரணம் தான் கேட்டோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக சொல்லியிருக்கிறார்.
இந்த மாதம் முதல்வாரத்தில் கன மழையும் மிக்ஜாம் புயலும் சென்னையை புரட்டிப்போட்டது. இதனால்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. புயலும், மழை வெள்ளமும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி விட்டு சென்றுவிட்டது. இதனிடையே, இந்த வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடியை முதல்கட்டமாக வழங்குமாறு கேட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதற்கு மத்திய அரசோ முதல்கட்டமாக ரூ.450 கோடியை மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒன்றிய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர்கள் (பாஜக) ஆளுகின்ற மாநிலங்களில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், அங்குள்ள ஆளுநர்களின் செயல்பாடுகளையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடப்பதையும் ஒப்பிட்டு பார்த்தாலே அது தெரியும்.
ஆளுநர்கள் மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசுவது தான் மற்ற மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் அதிக அளவில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசுக்கு தருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு தரும் நிதியை விட தமிழகத்துக்கு குறைவான நிதியை தான் மத்திய அரசு கொடுக்கிறது. இப்போது கூட வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5060 கோடியை மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால் அவர்களோ வெறும் ரூ.450 கோடியை மட்டுமே தந்திருக்கிறார்கள். நாங்க என்ன பாத்திரத்தை எடுத்து உங்களிடம் (மத்திய அரசு) பிச்சையா கேட்கிறோம்.
நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம். மத்திய அரசு இப்படி பாரபட்சம் காட்டுவது சரியல்ல என ரொம்பவே கோபமாக அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
ஸ்ரீராம் அடுக்கு மாடியினர் உதவி!
மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை முடிச்சூர், வரதராஜபுரம் மக்களுக்கு அரிசி பெட்ஜிட், முட்டை மற்றும் வெஜ் பிரியாணியை ஸ்ரீராம் சங்கரி அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் வழங்கினர்.
சென்னை புறநகர் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், தாழ்வான குடியிருப்பு பகுதிகளை புரட்டி போட்டதால், தங்கள் வாழ்வாதாரம் இழந்த
குடும்பங்களுக்கு நிவாரண வழங்குவதற்கு கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உள்ள வி.கே.பிரபு அவர்கள் தலைமையில் ஷ்ரீராம் சங்கரி அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சார்பாக 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவ ,பால், பிஸ்கட், தண்ணீர் முட்டை மற்றும் பெட்ஜிட் ஆகியவை வழங்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் தினமும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்..
ஏற்கனவே கஜா புயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீராம் சங்கரி அடுக்குமாடி குடியிருப்பினர் ஒன்று சேர்ந்து 5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.