பெண் கழுத்து அறுத்து கொலை! குற்றவாளிக 12 மணி நேரத்தில் கைது செய்த சூப்பர் போலிஸ்!

பெண் கழுத்து அறுத்து கொலை! குற்றவாளிக 12 மணி நேரத்தில் கைது செய்த சூப்பர் போலிஸ்!

 ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

 கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கரையாம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி தங்கமணி(56) வசித்து வந்தனர்.

 தங்கமணி பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். சம்பவதன்று, மாலை சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில்  இருந்த தங்கமணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து அவரது கணவர் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.

 கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களது உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடினர்.

 அதில், இறந்த பெண்ணின் உறவினரான எல்லைபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த அம்மாசெட்டி  மகன் கன்னியப்பன் (29) மற்றும் அவரது நண்பர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் மகன் சுதாகர் என்ற வேங்கை சுதாகர்(30) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கமணியை கொலை செய்துள்ளனர் என கண்டறிந்தனர்.

  அவர்களை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், தங்கமணியிடம் கன்னியப்பன் கடந்த 2020-ஆம் ஆண்டு  5 லட்சம் கடன் பெற்றதாகவும், கடனை தங்கமணி திருப்பி கேட்கவும், கடனை செலுத்த முடியாததால், கன்னியப்பன் அவரது நண்பர் சுதாகருடன் சேர்ந்து தங்கமணியை கொலை செய்ய திட்டம் போட்டு, தங்கமணியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் சேர்ந்து உளியால் தங்கமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.

   பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறையினரை கோவை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.