மாநகராட்சி ஏரிகளிலும் ஆறுகளிலும் குப்பை கொட்டுகிறது! அமைச்சர் துரைமுருகன் வேதனை!

ஜி.கே.சேகரன்,

 எல்லா ஊர்களிலும் குப்பை கொட்ட தனி இடத்தை தேர்வு செய்துள்ளனர் ஆனால் மாநகராட்சி ஏரிகளிலும் ஆறுகளிலும் தான் குப்பையை கொட்டுகின்றனர் இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் ஏற்கனவே பாலாறு தோல் கழிவுகளால் கலந்துள்ளது என அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது.

  இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இக்கூட்டத்திற்கு பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடையே கூறுகையில்,   மோர்தானா அணை சுற்றுலா பயணிகள் கவரும் விதமாக செய்யலாம் தடுப்பணைகளை கட்ட ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது, தண்ணீர் வற்றியவுடன் தடுப்பணை பணிகள் துவங்கபடும்.

  திருமணி மண்ரோடு அடித்து செல்லப்பட்டுவிட்டது எத்தனை தரைப்பாலம் தான் அமைப்பது காவிரி நீரை ஒவ்வொரு முறையும் போராடி தான் பெற்றுகொண்டிருக்கிறோம்.

 உச்சநீதிமன்றமே அவர்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்தும் கர்நாடகா அதன்படி  நடக்கவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.

  நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகம் செய்துள்ளா£, அவரது கொடி பறக்கும் போது பார்ப்பேன்.  அமைச்சரவை மாற்றம் குறித்து தகவலே தெரியாது முதலமைச்சரே சொல்லிவிட்டார் முதலமைச்சர் ஆளுமைக்கும் நிர்வாகத்திற்கும் உட்பட்டு அனைத்தையும் செய்வார் அதில் தலையிட முடியாது.

  எல்லா ஊர்களிலும் குப்பை கொட்ட தனி இடத்தை தேர்வு செய்துள்ளனா.¢ அதே போல் தான் வேலூர் மாநகராட்சியும் என் தொகுதியில் குப்பை கொட்ட முயன்றது நான் தடுத்து ரகளை செய்துவிட்டேன். அப்புறம் நந்தகுமார் தொகுதியிலும் தடுத்துவிட்டனர்.

 அதனால ஆற்றிலும் ஏரிகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனா.¢ ஏற்கனவே பாலாறு தோல் கழிவுகளால் மாசடைந்துவிட்டது.  இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். வேலூரிலிருந்து கழிவு நீர் காங்கேயநல்லூர் வரையில் வருகிறது. ஏன் வருகிறதுரதை பார்க்க வேண்டும் எங்க ஆறு அது என கூறிவிட்டு புறப்பட்டார்.