நீ அதுக்கு லாயக்கில்லை என்று சொன்ன தோழியை வெட்டிக்கொன்ற தோழன்!

நீ அதுக்கு லாயக்கில்லை என்று சொன்ன தோழியை வெட்டிக்கொன்ற தோழன்!

  எம்.டெல்லிராஜன்,

     நீ அதுக்கு லாயக்கில்லை என்று சொன்ன நண்பர்கள் முன்பு நக்கல் செய்த தோழியை வெடிக்கொன்ற தோழன் குறித்த பரபரப்பான செய்தி தான் இது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரியை சேர்ந்தவர் நவுஷித். ஹோட்டல் ஒன்றில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சங்கனாச்சேரியை சேர்ந்த ரேஷ்மா என்பவர் சமூக வலைதளம் மூலம்  அறிமுகமாகியுள்ளார்.

 கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ரேஷ்மா லேப் ஒன்றில் அசிஸ்டண்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

   அவர்களின் நட்பு பின்னர் போன் வழியாக நேரில் சந்திக்கும் வளர்ந்துள்ளது. இருவருக்குமான நட்பு அவர்களின் நண்பர்கள் வரை பரீட்சயமாகியுள்ளது. இதையடுத்து ரேஷ்மாவும் நவுஷித்தும் தனியாகவும் அவர்களின் நண்பர்கள் உடனும் சேர்ந்து பேசி வந்துள்ளனர்.

   இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷ்மாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளார் நவ்ஷித். நவ்ஷித்தை நம்பி ஹோட்டலுக்கு வந்துள்ளார் ரேஷ்மா. அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நவ்ஷித் கத்தியை எடுத்து ரேஷ்மாவின் கை மற்றும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேஷ்மா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரேஷ்மாவின் உடலை கைப்பற்றியதோடு, நவ்ஷித்தையும் கைது செய்தனர். கொலை தொடர்பாக நவ்ஷித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்.

 அதாவது ரேஷ்மா, தனக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சூனியம் செய்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்கள் மத்தியில் ரேஷ்மா தனது செக்ஸ் பலவீன ரகசியங்களை கேலி செய்து, நீ அதுக்கு லாயக்கு இல்லை என்றூ சொன்னதாலும் நவுஷித்துக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும் இதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.