லியோ திரைப்படமும் ரவுண்டு கட்டும் சிக்கல்களும்! இழுத்துவரப்பட்ட அஜித் !ஜெயகுமார் பேட்டி!!

ம.பா.கெஜராஜ்,
நீதிமன்றத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் லியோ படக்குழுவினர் அல்ய்ந்த் உ வரும் நிலையில் ஒரு¢ விபத்து அவர்களை மேலும் கலங்கடித்திருக்கிறது.
இளைஞர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் நாளை (அக். 19) திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதி£பலைகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
லியோ போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் முதல் டிரெய்லரில் வரும் கெட்டவார்த்தை வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதான் இப்படி என்றால், டிரெய்லர் வெளியிடப்பட்ட ரோகிணி உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளை விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
மேலும் லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கும் 'செக்' வைத்தது. சட்டம் ஒழுங்கை சுட்டிக்காட்டி 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் சென்ற போதிலும் அனுமதி கிடைக்கவில்லை. அதன் பிறகு, காலை 7 மணி காட்சிக்காவது அனுமதி கோரி படக்குழுவினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துவிட்டது.
ஏற்கனவே லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு அரசு அனுமதி மறுத்த நிலையில், தற்போது இந்த விவகாரத்திலும் இழுபறி நீடிப்பதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் லியோ திரைப்பட தயாரிப்புக் குழுவினர், தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், உள்துறைச் செயலாளர் அமுதாவை சந்திப்பதற்காக லியோ திரைப்பட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்தனர். பின்னர் அவரிடம் பேசிவிட்டு மாலை திரும்பும் போது, வழக்கறிஞரின் கார், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் மீது மோதியது. இதில் அந்த பைக்கின் மீது காரின் சக்கரம் ஏறி நின்றது.
விபத்தில் காயமடைந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கோட்டை கொத்தளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இழுத்துவரப்பட்ட அஜித் ஜெயகுமார் பேட்டி.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் திரைப்பட துறையை சுதந்திரமாக செயல்பட வைத்தோம். ஆனால் தற்போது எல்லா வகைகளிலும் நெருக்கடி கொடுக்கிறார்கள். ரெட் ஜெயண்ட் வரலாற்றை கொஞ்சம் பாருங்க. ஆட்சிக்கு வருவதற்கு முன் 10, 20 படங்களை வெளியிட்டிருப்பார்கள்.
அதாவது, கடந்த 10 ஆண்டுகளில். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். படம் வெளிவர வேண்டுமெனில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்தால் தான் முடியும் என்று அதிகாரப் போக்கை செலுத்தி உள்ளனர். பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்று கலைஞர் கருணாநிதிக்கு விழா எடுக்கும் போது மேடையில் ஏறி நடிகர் அஜித் என்ன சொன்னார்? "நான் அழைத்து வரப்படவில்லை.
இழுத்து வரப்பட்டேன்" என்று கூறினார். இவ்வாறு திரைப்படக் கலைஞர்களை அச்சுறுத்தி வைத்துள்ளனர். இந்த விஷயங்களை திரைப்படக் கலைஞர்கள் உணர வேண்டும். அவர்கள் தங்களுடைய மவுனம் கலைக்க வேண்டும். லியோ பட விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதில் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ஜெயக்குமார் சொன்னார்.