நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும் ஆளும்கட்சி பிரமுகர்! வேடிக்கை பார்க்கும் அரசு அலுவலர்!

ஜி.கே.சேகரன்,
குளத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் கோரிக்கை
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வரகூர் பட்டினம் கிராம பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தினை அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்மான அருள் தேவன் ஆக்கிரமிப்பு செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
வரகூர் பட்டணம் கிராமம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தை நம்பியே இருக்கிறது.
அந்த குளத்து நீரை பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது நன்கு ஏக்கர் பரப்பளவில் இருந்த குளத்தின் ஒரு ஏக்கர் பரப்பளவு இடத்தை அப்பகுதி சேர்ந்த திமுக பிரமுகர் அருள் தேவன் ஆக்கிரமிப்பு செய்து தனக்கு சொந்தமான இடம் என அடாவடி செய்து வருகிறார்.
மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தின் வழியாக பல ஆண்டுகளாக பல்வேறு கிராம பொதுமக்கள் பயணம் செய்யும் பாதையாக பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது பயணம் செய்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இந்த பிரச்சனை சம்பந்தமாக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்துடன் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்
மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அருள் தேவன் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இருக்கும் குலத்தினை மீட்டு கிராம மக்களின் பயன்பாட்டிற்கு பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தும் அரசு அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை என்பதினால் முதற்கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அம்மக்களிடம் பனவசதி இல்லை. இலவசமாக அவர்களுக்கு சட்ட உதவிகளை செய்து ஆக்கிரமிப்பு நீர்நிலைகளை மீட்க ஒரு குழு தயாராகி வருகின்றன.
அப்படின்னா அரசு அதிகாரிகள் மீட்க்கமாட்டார்களா?