செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக இன்ஸ்பெக்டர் மீது பேராசிரியர் கிரிஜா புகார்! வச்சுகிறீயா என போலிஸ் அழைப்பதாக கண்ணீர்!

செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக இன்ஸ்பெக்டர் மீது பேராசிரியர் கிரிஜா புகார்! வச்சுகிறீயா என போலிஸ் அழைப்பதாக கண்ணீர்!

ம.பா.கெஜராஜ்,       

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்ற கிரிஜா என்கிற பேராசியை தற்போது இன்ஸ்பெக்டர் மீதே புகார் தெரிவித்திருக்கிறார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கிரிஜா, தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

 திருச்சி பாலக்கரை கிருஷ்ணன் கோவில் தெரு அருகே வசித்து வரும் அவர் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கிறார்.

 இந்நிலையில் அவரது உறவினரான ஒருவர் தேர்வு எழுதுவதற்காக திருச்சிக்கு வந்து கிரிஜா வீட்டில் தங்கினாராம். அப்போது அவர் கூல்டிரிங்கிஸில் மது கலந்து கொடுத்து மானபங்கப் படுத்தியதாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிரிஜா புகார் செய்தார்.

   அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உறவினர் கைது செய்யப்பட்டார்.

  இந்நிலையில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார் தனக்கு ஆபாச மெஸேஜ்களை அனுப்பி பாலியலுக்கு அழைப்பதாக கிரிஜா ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

  இதுகுறித்து செய்தியாளர்களிடையே கிரிஜா தெரிவிக்கையில், 'சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி கணிதம் படித்து வருகிறேன். மேலும், இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன். 

 அப்படியிருக்க எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

  அப்போது எனது செல்போனை இன்ஸ்பெக்டர் சுகுமார் வாங்கி வைத்துக்கொண்டார். இதற்கிடையே அந்த முதல் தகவல் அறிக்கையில் சில தவறான தகவல்கள் இடம் பெற்று இருந்ததால் அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் காவல்துறை துணை ஆணையரை சந்திக்க காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றேன்.

 அப்போது என்னைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்த

 வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். தன் ஆசைக்கு நான் இணங்காவிட்டால் ஊரை விட்டு துரத்துவேன் என மிரட்டினார்.

 போலிஸ் ரைட்டர் லதா தான் இதற்கெல்லாம் காரணம். அவர் உட்பட சில போலீசாரும் சுகுமாருக்கு உதவியாக இருக்கின்றனர். காளிமுத்து என்கிற காவலர் வரீயா உன்னை வச்சுக்கிறேன் என்கிறார். மேலும் என்னை தாக்கி புடவையை அவிழ்கிற மாதிரி வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கக்கூடாது' என்று சொன்னார்.

 இந்த குற்றச்சாட்டு குறித்து காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் கூறுகையில், ' என் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார்'

 இந்த விவகாரத்தில் யாரோ பின்னணியாக செயல்படுகிறார்கள் என்றார்.

  இந்த விவகாரத்தை குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா இ.கா.ப.அவர்கள் உத்தவிட்டுள்ளார், அதற்கு ஏதுவாக இன்ஸ்பெக்டர் சுகுமாரை காத்திரிப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.