கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் மீது பெண் எம்பி புகார்:-வழக்கு பதிவு! பாஜக இதில் அரசியல் செய்யக்கூடாது!

 ம.பா.கெஜராஜ்,

 அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசிடம் போன் மூலம் புகார் தெரிவித்திருந்தார்.ஜதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே டெல்லி பாஜக தீவிரமாக விமர்சனங்களை முனைவைத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 இதையடுத்து, டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் இன்று மே 17-ம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய மகளிர் ஆணையத்தின் முன நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் எழுத்துப்பூர்வமாக போலீசிடம் புகார் அளித்தார். இந்நிலையில், முதல் மந்திரியின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் மீது பெண் எம்பி புகார்:-வழக்கு பதிவு! பாஜக இதில் அரசியல் செய்யக்கூடாது!

   போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் ஸ்வாதிக்கு மலிவால் தனது எக்ஸ் தள பக்கத்தில் "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது.  எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.

எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.

 நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தல் தானே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். குறிப்பாக பாஜக இதை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" பிரிஜ்பூஷண் மீது எழுந்த செக்ஸ் புகாரை பாருங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.