அங்கன்வாடி மையத்தில் சரக்கு - தம் - பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ்! ஆளுங்கட்சி பிரமுகர் மகனை கைது செய்து விடுவித்தனர்!
J.D. பிரகாஷ்,
வேலூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த திமுகவின் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மற்றும் திமுக வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரனின் மகன் சரண் என்பவர் அரசு அங்கன்வாடி மையத்தில் பார் போல் செட் அமைத்து மலையாள பட காட்சியை ரீகிரியேசன் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
கையில் மது பாட்டில் மற்றும் பட்டாகத்திகளுடன் இந்த ரீல்ஸ் வெளியானது.
இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அரசு கட்டிடத்தில் அத்திமீரியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் திமுக பிரமுகரின் மகன் சரண் உட்பட 3 பேரை கைது செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு காவல் நிலைய பிணையில் அனுப்பினர்.
சாதாரணமாக மோட்டர் பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் வெளியிட்டாலும் சரி, பட்டாக் கத்தியில் கேக் வெட்டியவர்களையும் சரி பிடித்து சிறையில் அடைக்கும் போலீசார் இதற்கு மட்டும் ஏனோ விதிவிலக்காக அனுப்பி வைத்தனர்? எல்லாம் பவர் தான் காரணமோ?!
இதைப் பார்த்த பொதுமக்கள் சட்டம் அனைவருக்கும் சமம் தானே என்று அப்பாவியாக கேட்கின்றனர் ஆனால் அவர்களுக்குபதில் சொல்லத்தான் எவருமில்லை.