நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! நடைமுறைகளை வெளியிட்ட ஆணையம்!

நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு! நடைமுறைகளை வெளியிட்ட ஆணையம்!

நரேஷ்.என்,

 தேர்தல் முடிவுகளின் போது நூலிழையில் வெற்றி வாப்பை பறிகொடுத்த வேட்பாளர்கள் பலர் நாடெங்கிலும் புகார்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாகவும் குறிப்பாக மின்னனு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை உறுதி படுத்திடவும் தேர்தல் ஆணையம் ஒரு நடைமுறையை வெளியிட்டிருக்கிறது. 

  கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

 அப்படியிருக்க இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 அதில், வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.

 தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம்.

 அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.

   இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் விவிபேட் யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும் இணைத்து சோதித்து பார்க்கலாம்.

  அந்த வகையில், ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும்.

  இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி  இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த வேட்பாளர்கள் வாக்குபதிவு செய்து சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அதற்கான முழு நடைமுறை விவரங்களையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கிறது.

குறிப்பு:- தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.

  இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை உச்சநீதிமன்றம், கடந்த ஏப்ரல் 26  ஆம் தேதி தள்ளுபடி செய்துஅதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.

 இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் இந்த முழு நடைமுறையை அறிவித்திருக்கிறது.