எம்.எல்.ஏ.இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் தாக்கலை கவனித்த பெரியவர்! உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்!

எம்.எல்.ஏ.இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் தாக்கலை கவனித்த பெரியவர்! உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்!

 ம.பா.கெஜராஜ்,

 கர்நாடக அரசு புதிதாக ஆட்சியமைத்தபின் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தில் எம்.எல்.ஏ.வுக்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் பாதுகாப்பை மீறி சட்டசபைக்குள் நுழைந்து எம்.எல்.ஏ. இருக்கையில் ஒருவர் சென்று அமர்ந்துள்ளார். எனவே பாதுகாப்பு குறித்து விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது.

இது பற்றின விவரம் வருமாறு,

 கர்நாடகா சட்டசபையில் சித்தராமையான நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனையொட்டி விதானா சவுதாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பாதுகாப்பை மீறி ஒரு வயதானவர் எம்.எல்.ஏ. இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டு பட்ஜெட் தாக்கலை வேடிக்கைப் பார்த்தார்.

 அந்த 70 வயது முதியவர்  ம.த.க.எம்.எம்.ஏ.  கரியம்மாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையாகும். அப்படியிருக்க அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் முதியவர் சென்று அமர்ந்து கொண்டார்.

 சற்று நேரம் கழித்து  அருகில் இருந்த மற்றொரு மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ., உடனடியாக சட்டசபை செயலரிடம் புகார் அளித்துள்ளார். அடுத்த நிமிடமே போலீசார் வரவழைக்கப்பட்டு சட்டசபையில் இருந்து அந்த முதியவர் வெளியேற்றப்பட்டார். சபாநாயகரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   அவரிடம் விசாரித்தபோது, அவர் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாகவும், எம்.எல்.ஏ. இல்லை எனவும் தெரியவந்தது.